Monday 21 November 2011

தொடு தொடுவெனவே....

படம் – துள்ளாத மனமும் துள்ளும்
பாடல் வரிகள் – வைரமுத்து
இசையமைத்தவர் – எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடியவர்கள் – ஹரிஹரன், சித்ரா
வெளிவந்த வருடம் - 1999.

இந்த பாடலின் வரிகளுக்காகவும், ஹரிஹரனின் குரலுக்காகவும் நான் ரசித்த பாடல் இது.....  நீங்களும் ரசியுங்களேன்....

பாடலைப் பார்க்க:



பாடல் வரிகள்:

தொடு தொடுவெனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு வெனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்

மன்னவா ஒரு கோயில் போல்
இந்த மாளிகை எதற்காக
தேவியே என் ஜீவனே
இந்த ஆலயம் உனக்காக

வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே என்னை எங்கனம் காப்பாய்
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்
சாத்தியமாகுமா? நான் சத்தியம் செய்யவா

தொடு தொடுவெனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்….

இந்த பூமியே தீர்ந்து போய்விடில்
என்னை எங்கு சேர்ப்பாய்
நட்சத்திரங்களை தூசி தட்டி
நான் நல்ல வீடு செய்வேன்
நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகி போய் விடில் என் செய்வாய்
உருகிய துளிகளை ஒன்றாக்கி
என் உயிர் தந்தே உயிர் தருவேன்
ஹேய் ராஜா! இது மெய் தானா
ஹே பெண்ணே! தினம் நீ செல்லும் பாதையில்
முள் இருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை
நான் நம்புகிறேன் உன்னை.

தொடு தொடுவெனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு வெனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்…

நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை
இதில் எங்கு நீச்சல் அடிக்க
அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லிராணி குளிக்க
இந்த ரீதியில் அன்பு செய்தால்
என்னவாகுமோ என் பாடு
காற்று வந்து உன் குழல் கலைத்தால்
கைது செய்வதென ஏற்பாடு
பெண் நெஞ்சை அன்பால் வென்றால்
ஹே ராணி! அந்த இந்திர லோகத்தில்
நான் கொண்டு தருவேன்
நாளொரு பூ வீதம் உன் அன்பு அது போதும்

தொடு தொடுவெனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு வெனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்

மன்னவா ஒரு கோயில் போல்
இந்த மாளிகை எதற்காக
தேவியே என் ஜீவனே இந்த ஆலயம் உனக்காக
வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே என்னை எங்கனம் காப்பாய்

கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்
சாத்தியமாகுமா? நான் சத்தியம் செய்யவா…..


Monday 7 November 2011

கண்ணே கலைமானே



படம்:                      மூன்றாம் பிறை
பாடகர்:                  கே.ஜே. யேசுதாஸ்
நடிகர்கள்:              கமல்ஹாசன், ஸ்ரீதேவி
பாடல் வரிகள்:    கண்ணதாசன்
இசை:                     இளையராஜா
படம் வெளிவந்த வருடம்: 1983

இன்று கமலஹாசன் அவர்களுடைய பிறந்த நாள். அதை முன்னிட்டு அவருடைய மூன்றாம் பிறை படத்திலிருந்து நான் ரசித்த பாடலாய் கண்ணே கலைமானே பாடல் உங்களுடன் பகிர்கிறேன். பாடியவர் கானகந்தர்வன் கே.ஜே.யேசுதாஸ். பாடலை கேட்டு நீங்களும் ரசிங்களேன். 

பாடல் கேட்க:

 
Kanne Kalaimaane | Musicians Available

பாடல் வரிகள்:

கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே

கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிரோ... ஓராரிரோ…
ராரிரோ… ஓராரிரோ…

கண்ணே கலைமானே
கன்னி மயிலென கண்டேன்
உனை நானே

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதிலொரு அமைதி
நீயோ கிளிப் பேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது

கண்ணே கலைமானே
கன்னி மயிலென கண்டேன்
உனை நானே

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிரோ... ஓராரிரோ…
ராரிரோ… ஓராரிரோ…


காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைப்பேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சன்னிதி 

கண்ணே கலைமானே
கன்னி மயிலென கண்டேன்
உனை நானே

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிரோ... ஓராரிரோ…
ராரிரோ… ஓராரிரோ…

ராரிரோ.. ஓராரிரோ…
ராரிரோ.. ஓராரிரோ…