பாரதிதாசன் அவர்களின் வரிகளில் தமிழின் சிறப்பை எடுத்து சொல்லும்
இந்த அழகிய பாடல், ரசித்த பாடல் வலைப்பூவின் 50 வது பாடல். இதுவரை இந்த வலைப்பூவுக்கு
ஆதரவு தந்து கொண்டிருக்கும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி. இந்தப் பாடலை நீங்களும்
பார்த்தும், கேட்டும் ரசியுங்களேன்.
மீண்டும் வேறு ஒரு நல்ல பாடலுடன் சந்திக்கும் வரை,
ஆதி வெங்கட்.
படம் – பஞ்சவர்ணக்கிளி
பாடியவர் – பி.சுசீலா
இசை – எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடல் வரிகள் – பாரதிதாசன்
படம் வெளிவந்த வருடம் – 1965
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்… உயிருக்கு நேர்
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்… உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின்
விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணம் என்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு
நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்
தமிழுக்கு மதுவென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம்
பயிருக்கு வேர்… பயிருக்கு வேர்
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்… உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
இன்பத் தமிழ் நல்ல புகழ் மிக்க
புலவர்க்கு வேல்… புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு
சுடர் தந்த தேன்… சுடர் தந்த தேன்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு
சுடர் தந்த தேன்… சுடர் தந்த தேன்…
சுடர் தந்த தேன்
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்… உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்
இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு
வைரத்தின் வாள்… வைரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளம் மிக்க
உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளம் மிக்க
உளமுற்ற தீ
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்… உயிருக்கு நேர்
தமிழுக்கும் அமுதென்று பேர்