Tuesday 10 September 2013

இளைய நிலா பொழிகிறதே



ரசித்த பாடலில் நீண்ட நாட்களாக பதிவிட எண்ணி நினைத்து வெளியிடாமல் இருந்த பாடல் இதோ…. இசைஞானி இளையராஜாவின் இசையிலும் எஸ்.பி.பீயின் குரலிலும் வைரமுத்து அவர்களின் வரிகளிலும் அற்புதமான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். கல்லூரி நாட்களில் இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்ட விதத்தை பற்றி என் ஆரம்ப கால பதிவு ஒன்றில் எழுதியுள்ளேன். இதோ அதன் சுட்டி இளைய நிலா பொழிகிறது

இந்தப் பாடலை நீங்களும் கேட்டு ரசியுங்கள்

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

படம்பயணங்கள் முடிவதில்லை
பாடியவர்எஸ்.பி.பீ
இசைஇளையராஜா
பாடல் வரிகள்வைரமுத்து
படம் வெளிவந்த வருடம் – 1982
நடித்தவர்கள் - மோகன், பூர்ணிமா பாக்யராஜ்





இளைய நிலா பொழிகிறதே இதயம்வரை நனைகிறதே 
உலாப்போகும் மேகம் கனாக்காணுமே விழாக்காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே இதயம்வரை நனைகிறதே 
உலாப்போகும் மேகம் கனாக்காணுமே விழாக்காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே இதயம்வரை நனைகிறதே

வரும் வழியில் பனிமழையில் பருவநிலா தினம் நனையும் 
முகிலெடுத்து முகம் துடைத்து விடியும்வரை நடைபழகும்
வரும் வழியில் பனிமழையில் பருவநிலா தினம் நனையும் 
முகிலெடுத்து முகம் துடைத்து விடியும்வரை நடைபழகும்
வானவீதியில் மேக ஊர்வலம் காணும்போதிலே ஆறுதல் தரும் 
பருவமகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா பொழிகிறதே
உலாப்போகும் மேகம் கனாக்காணுமே விழாக்காணுமே வானமே 
இளைய நிலா பொழிகிறதே
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ 
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ 
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ
நீலவானிலே வெள்ளி ஓடைகள் ஓடுகின்றதே என்ன ஜாடைகள் 
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்


இளைய நிலா பொழிகிறதே இதயம்வரை நனைகிறதே 
உலாப்போகும் மேகம் கனாக்காணுமே விழாக்காணுமே வானமே 
இளைய நிலா பொழிகிறதே ….