Monday 23 December 2013

முதன் முதலாக காதல் டூயட் ....

நிறம் மாறாத பூக்கள் படத்திலிருந்து இந்த பாடலை சமீபத்தில் கேட்டேன். உற்சாகம் தரும் பாடலாக இருக்கிறது.. எனக்கு பிடித்த இந்தப் பாடலை நீங்களும் கேட்டு ரசியுங்களேன்..

மீண்டும் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.
படம் - நிறம் மாறாத பூக்கள்
பாடியவர்கள் - எஸ்.பி.பி, எஸ்.ஜானகி
இசை - இளையராஜா
படம் வெளிவந்த வருடம் - 1979

முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே

சீதா என் காதல் கொடியே கண் பாரம்மா
ஆதாரம் நீயில்லாமல் வேறேதம்மா
சீதா என் காதல் கொடியே கண் பாரம்மா
ஆதாரம் நீயில்லாமல் வேறேதம்மா

ஆசையுடன் நம்பி வந்த பெண்ணை இன்று
மோசம் செய்த துரோகியே
 உன் கோபம் தேவைதானா அன்பே ஆருயிரே
அது யாரந்த பெண்
ஒரு நடிகையம்மா
அந்த கழுதையை நீ கொஞ்சி அணைப்பது தவறு

முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தாயோ
நீ காதல் மன்மதனோ நான் பறந்து போவேனோ
முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே

ஜீனத் என் கனவில் வந்தாள் உன் போலவே
சிங்காரப் பாவை உந்தன் வடிவாகவே..
ஜீனத் என் கனவில் வந்தாள் உன் போலவே
சிங்காரப் பாவை உந்தன் வடிவாகவே..

ஜீனத்தமன் போல் என்னை எண்ணி வந்து
பாட்டு பாடும் துரோகியே
ஐயய்யோ... சும்மா தான் ஜாடை சொன்னேன்
கண்ணே கண்மணியே
என்னை போல் ஒரு பெண்
இந்த உலகில் இல்லை
ஒரு நடிகையை போல் என்னை பார்ப்பது தவறு.

முதல் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
முதல் முதலாக காதல் டூயட் பாட வந்தாயோ.


Saturday 7 December 2013

கண்ணா... என்ன குறையோ!



சற்றே இடைவேளைக்குப் பிறகு நமது ரசித்த பாடலில் ஒரு பகிர்வு. இரண்டு மூன்று நாட்களாக மனதில் ஓடிக் கொண்டிருந்த பாடல்.... சுதா ரகுநாதன் அவர்களின் குரலில் மெல்லிய இசையாக, மனதிற்கு இதம் தரும் பாடல்....எனக்கு பிடித்த இந்தப் பாடல் நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்... கேட்டு ரசியுங்களேன்....

மீண்டும் வேறு ஒரு பாடல் பகிர்வில் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

திரைப்படம் : மந்திரப்புன்னகை
இசை : வித்யாசாகர்
பாடல் வரிகள் : அறிவுமதி
பாடியவர் : சுதா ரகுநாதன்

படம் வெளிவந்த வருடம் - 2010




கண்ணா....கண்ணா....கண்ணா
என்ன குறையோ எந்த நிறையோ 
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன தவறோ என்ன சரியோ 
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
என்ன வினையோ என்ன விடையோ
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன குறையோ எந்த நிறையோ 
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்


நன்றும் வரலாம் தீதும் வரலாம்
நண்பன் போலே கண்ணன் வருவான்
வலியும் வரலாம் வாட்டம் வரலாம்
வருடும் விரலாய் கண்ணன் வருவான்

நேர்கோடு வட்டம் ஆகலாம்
நிழல் கூட விட்டுப் போகலாம்
தாளாத துன்பம் நேர்கையில் 
தாயாக கண்ணன் மாறுவான்

அவன் வருவான் கண்ணில் மழை துடைப்பான்
இருள் விழிகளிலே புது ஒளி விதைப்பான்
அந்தக் கண்ணனை அழகு மன்னனை 
தினம் பாடி வா மனமே

என்ன குறையோ எந்த நிறையோ 
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
கண்ணன்....கண்ணன்....கண்ணன்...கண்ணன்


உண்டு எனலாம் இல்லை எனலாம்
இரண்டும் கேட்டுக் கண்ணன் சிரிப்பான்
இணைந்து வரலாம் பிரிந்தும் தரலாம்
உறவைப்போலே கண்ணன் இருப்பான் 

பனிமூட்டம் மலையை மூடலாம்
வழி கேட்டுப் பறவை வாடலாம்
புதிரானக் கேள்வி யாவிலும்
விடையாகக் கண்ணன் மாறுவான்

ஒளிந்திருப்பான்..எங்கும் நிறைந்திருப்பான்
அவன் இசைமழையாய் உலகினை அணைப்பான்
அந்தக் கண்ணனை..கனிவு மன்னனை
தினம் பாடிவா மனமே.......