Monday 3 December 2012

மனசுக்குள்உட்கார்ந்து மணியடித்தாய்….



”கல்யாண அகதிகள்” படத்தில் வரும் இந்தப் பாடலை சில நாட்களாக முணுமுணுத்துக் கொண்டே இருந்தேன். கே.பாலச்சந்தர் அவர்களின் படம் இது. தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் எல்லாம் இந்தப் பாடலை கேட்கும் போது நினைவுக்கு வரும். அப்போது அது தானே நமக்கான பொழுதுபோக்கு. நான் ரசித்த இந்தப் பாடலை நீங்களும் கேட்டு ரசியுங்களேன்.

மீண்டும் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கும் வரை,
ஆதி வெங்கட்.

படம் – கல்யாண அகதிகள்
பாடியவர்கள் – பி.சுசீலா
இசையமைத்தவர் – வி.எஸ்.நரசிம்மன்
படம் வெளிவந்த வருடம் -  1985


மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்

இறகான என் நெஞ்சில் இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்
மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்

காதலின் செய்திகள் கண்களில் உள்ளது
அதை நான் படிக்க மொழி கிடையாது
காதலே நம்மிடம் கையொப்பம் கேட்டது
இனிமேல் உலகில் தடைகிடையாது
நாணம் கொண்டதே என் பூவனம்
பெண்மை ஒன்றுதான் என் சீதனம்
அடடா...  ஆஆஆஅ.  அடடா இது தான் ஆலிங்கனம்

மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
இறகான என் நெஞ்சில் இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்
மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்

கண்களில் காதலின் முன்னோட்டம் பார்த்தபின்
இதயம் முழுதும் எதிரொலி கேட்டேன்
மாலையில் சோலையில் இளம் தென்றல் வேளையில்
காண்போம் கற்போம் என்றுனைக் கேட்டேன்
கண்மணிப் பூங்காவில் காத்திருந்தேன்
கண்ணில் தடங்கலுக்கு வருத்தம் சொன்னேன்
விழியில்... ஆஆஆஆ. விழியில் ஒளியும் ஒலியும் கண்டேன்

மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
இறகான என் நெஞ்சில் இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்
மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்


Tuesday 20 November 2012

சிறு பொன்மணி அசையும்……



கல்லுக்குள் ஈரம் என்ற படத்தில் வரும் இந்த பாடல். எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று. இளையராஜாவின் இசையிலும், அவரின் குரலிலும் அருமையானதொரு பாடல். நான் ரசித்த பாடலை நீங்களும் கேட்டு ரசியுங்களேன்.

மீண்டும் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்.

படம்: கல்லுக்குள் ஈரம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, எஸ்.ஜானகி
படம் வெளிவந்த வருடம் - 1980


சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல
நானும் நீயும் சேர வேண்டும்

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்

விழியில் சுகம் பொழியும்
இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும்
இனி புலரும் பொழுதும்

விழியில் சுகம் பொழியும்
இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும்
இனி புலரும் பொழுதும்

தெளியாதது எண்ணம்
கலையாதது வண்ணம்

தெளியாதது எண்ணம்
கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது
அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது
கிளி பாடுது உன் நினைவினில்

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்

நதியும் முழு மதியும்
இரு இதயம்தனில் பதியும்
ரதியும் அதன் பதியும்
பெரும் சுகமே உதயம்

நதியும் முழு மதியும்
இரு இதயம்தனில் பதியும்
ரதியும் அதன் பதியும்
பெரும் சுகமே உதயம்

விதை ஊன்றிய நெஞ்சம்
விளைவானது மஞ்சம்

விதை ஊன்றிய நெஞ்சம்
விளைவானது மஞ்சம்
கதை பேசுது கவி பாடுது
கலந்தால் சுகம் மிஞ்சும்
உயிர் உன் வசம் உடல் என் வசம்
பயிரானது உன் நினைவுகள்

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல
நானும் நீயும் சேர வேண்டும்

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்

Wednesday 31 October 2012

வனக்குயிலே குயில் தரும்……..



பிரியங்கா படத்தில் வரும் இந்த அழகான பாடல் எஸ்.பி.பி அவர்களின் குரலிலும், இளையராஜா அவர்களின் இசையாலும்  மேலும் மெருகேறுகிறது. நான் ரசித்த, அவ்வப்போது முணுமுணுக்கும் இந்தப் பாடலை நீங்களும் ரசியுங்களேன்.

மீண்டும் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்.

படம் - பிரியங்கா
பாடியவர்கள்
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை – இளையராஜா
நடித்தவர்கள் – ரேவதி, ஜெயராம்


 


வனக்குயிலே குயில் தரும் கவியே

கவி தரும் இசையே..யே..யே..யே
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
கொடி மலரே மலர் விடும் இதழே
இதழ் தரும் மதுவே..ஏ..ஏ
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே

ஹோயல்லோ ஹோய ஹோய ஹோயல்லோ
ஹோயல்லோ ஹோய ஹோய ஹோயல்லோ
ஹோய ஹோய ஹோய ஹோயே
 
ஹோய ஹோய ஹோய ஹோயே
 

உன் ஞாபகம் நெஞ்சில் வந்தாடுதே
ஓயாமலே என்னைப் பந்தாடுதே
உன் பூமுகம் கண்ணில் நின்றாடுதே
நான் கொஞ்சவே என்னை மன்றாடுதே
படித்தால் இனித்திடும் புதினம்
உனை நான் மறப்பது கடினம்
அலையாய் தொடர்ந்திடும் நினைப்பு
வலைக்குள் தவித்திடும் தவிப்பு
துளிர்க்கும் ஆசை துளிர்த்தால்
மேனி சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும்

வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே

ஆஹா ஒஹோ ஓஹோஹோ
ஓ ஓஹோஹோ ஓஹோஹோ
ஆஹா ஆஹா...

செவ்வாழைகள் பந்தலாய் தோன்றுதே
கூந்தல் பனை தோரணம் ஆனதே
பூமாலையாய் தோன்றும் பூஞ்சோலையே
எங்கெங்கும் கல்யாணக் கோலங்களே
மணநாள் நினைவுகள் மலரும்
மனதில் மலையென வளரும்
வருவேன் தருவேன் கிளியே
விழிக்குள் இருக்கும் விழியே
இணைந்தால் இருவர் இணைந்தால்
இன்ப வரவும் உறவும் சுகமே

வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே..
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
கொடி மலரே மலர் விடும் இதழே
இதழ் தரும் மதுவே..ஏ..ஏ..
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே

Thursday 11 October 2012

என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட……..


நான் ரசித்த பாடல்களில் இளையராஜா அவர்களின் இசையில் மனதுக்கு இதமான இந்த பாடல், உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். பார்த்து, கேட்டு மகிழுங்கள்.

மீண்டும் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கும் வரை,
ஆதி வெங்கட்.

படம் – உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
பாடியவர்கள் – எஸ்.பி.பி, ஸ்வர்ணலதா
இசையமைத்தவர் – இளையராஜா
படம் வெளிவந்த வருடம் - 1992


என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக் கொண்ட
கண்ணன் ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
அன்பே ஓடி வா
அன்பால் கூடவா
ஓ.. பைங்கிளி…. நிதமும்

என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

சொந்தம் பந்தம் உன்னைத் தாலாட்டும் தருணம்
சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும்
பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்
பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து விடு
என்னுயிரை தீயாக்கும் மன்மத பாணத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு
அன்பே ஓடி வா
அன்பால் கூடவா
அன்பே ஓடி வா
அன்பால் கூடவா
ஓ.. பைங்கிளி… நிதமும்

என்னைத் தொட்டு, நெஞ்சைத் தொட்டு
என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட
மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக் கொண்ட
நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே
மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே
கன்னல் கன்னல் மொழி நீ பாடு குயிலே
கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே
அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே
என்னில் நீயடி
உன்னில் நானடி
என்னில் நீயடி
உன்னில் நானடி
ஓ…. பைங்கிளி…..நிதமும்

என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட
மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக் கொண்ட
நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
அன்பே ஓடி வா
அன்பால் கூடவா
ஓ.. பைங்கிளி…. நிதமும்

என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட
மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி



Thursday 27 September 2012

தேவனின் கோவில் மூடிய நேரம்……..




இந்த பாடல் என் மனதுக்குள் சில நாட்களாக ரீங்காரமிட்டு கொண்டிருந்தது. இளையராஜாவின் இசையில் மனதை வருடும் அருமையான பாடல். இதை நீங்களும் கேட்டு ரசியுங்களேன்…
 


மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.

படத்தின் பெயர் – அறுவடை நாள்
பாடியவர்கள் – இளையராஜா, கே.எஸ்.சித்ரா
இசையமைத்தவர் – இளையராஜா
பாடல் வரிகள் – கங்கை அமரன்
படம் வெளிவந்த வருடம் – 1986

 
தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே
இன்று என் ஜீவன் தேயுதே
என் மனம் ஏனோ சாயுதே
தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே

நானொரு சோக சுமைதாங்கி
துன்பம் தாங்கும் இடிதாங்கி
நானொரு சோக சுமைதாங்கி
துன்பம் தாங்கும் இடிதாங்கி

பிரிந்தே வாழும் நதிக்கரை போல
தனித்தே வாழும் நாயகி
இணைவது எல்லாம் பிரிவதற்காக
இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக
மறந்தால் தானே நிம்மதி

தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே

ஒருவழிப் பாதை என் பயணம்
மனதினில் ஏனோ பல சலனம்
ஒருவழிப் பாதை என் பயணம்
மனதினில் ஏனோ பல சலனம்

கேட்டால் தருவேன் என்றவன் நீயே
கேட்டேன் ஒன்று தந்தாயா
ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்
அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம்
நானோர் கண்ணீர் காதலி

தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே
இன்று என் ஜீவன் தேயுதே
என் மனம் ஏனோ சாயுதே
தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே



Monday 6 August 2012

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி….




ரசித்த பாடல் வலைப்பூவில் இன்று வெளியிடும் பாடல் “எங்கே நிம்மதி எங்கே நிம்மதி” என்ற பாடல். புதிய பறவை படத்தில் சிவாஜி கணேசன் ”ஓவராக” நடித்த பாடல். விஸ்வநாதன் – ராமமூர்த்தி பலவித இசைக்கருவிகளை பயன்படுத்தி இசையில் கலக்கி இருப்பார்கள். அவருடைய நடிப்புக்காக பிடிக்காவிட்டாலும், பாடலின் வரிகளுக்காகவும், இசைக்காகவும் நிச்சயம் பிடிக்கும். உங்களுக்கும் தான். இதோ “எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி..” பாடல் உங்களுக்காக!

அடுத்த ரசித்த பாடலுடன் சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.



பாடல் இடம்பெற்ற திரைப்படம்:புதிய பறவை.
பாடியவர்கள்: டி.எம். சௌந்தர்ராஜன்.
பாடலுக்கு இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல் வரிகள்: கண்ணதாசன்.
படம் வெளி வந்த வருடம்: 1964.

எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி.....
எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி.....
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி.....
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்


எங்கே மனிதர் யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி.....
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது

என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே
கண்ணைப் படைத்து பெண்ணை படைத்த இறைவன் கொடியவனே
ஓ...... இறைவன் கொடியவனே
எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி.....
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே

என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே
ஓ... உறங்குவேன் தாயே...

எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி.....
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்