Tuesday 27 March 2012

தமிழுக்கும் அமுதென்று பேர்…50வது பாடல்


பாரதிதாசன் அவர்களின் வரிகளில் தமிழின் சிறப்பை எடுத்து சொல்லும் இந்த அழகிய பாடல், ரசித்த பாடல் வலைப்பூவின் 50 வது பாடல். இதுவரை இந்த வலைப்பூவுக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி. இந்தப் பாடலை நீங்களும் பார்த்தும், கேட்டும் ரசியுங்களேன்.

மீண்டும் வேறு ஒரு நல்ல பாடலுடன் சந்திக்கும் வரை,
ஆதி வெங்கட்.

படம் – பஞ்சவர்ணக்கிளி
பாடியவர் – பி.சுசீலா
இசை – எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடல் வரிகள் – பாரதிதாசன்
படம் வெளிவந்த வருடம் – 1965


தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்… உயிருக்கு நேர்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்… உயிருக்கு நேர்

தமிழுக்கு நிலவென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின்
விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணம் என்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு
நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்
தமிழுக்கு மதுவென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம்
பயிருக்கு வேர்… பயிருக்கு வேர்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்… உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
இன்பத் தமிழ் நல்ல புகழ் மிக்க
புலவர்க்கு வேல்… புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு
சுடர் தந்த தேன்… சுடர் தந்த தேன்

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு
சுடர் தந்த தேன்… சுடர் தந்த தேன்…
சுடர் தந்த தேன்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்… உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்
இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு
வைரத்தின் வாள்… வைரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளம் மிக்க
உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளம் மிக்க
உளமுற்ற தீ

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்… உயிருக்கு நேர்
தமிழுக்கும் அமுதென்று பேர்


Thursday 15 March 2012

கண்ணா உனைத் தேடுகிறேன்………..


இந்த பாடல் ஒரு இனிமையான, அருமையான பாடல். எஸ்.பி.பி அவர்களின் குரலிலும், ஜானகியம்மாவின் குரலிலும் மேலும் இனிக்கிறது. இளையராஜா அவர்களின் இசையைப் பற்றி சொல்லவே வேண்டாம். பிரமாதமாக உள்ளது. நான் கேட்டு ரசித்த இந்த பாடலை நீங்களும் ரசியுங்களேன்.

மீண்டும் ஒரு நல்ல பாடலுடன் சந்திக்கும் வரை,
ஆதி வெங்கட்.

படம் –  உனக்காகவே  வாழ்கிறேன்
இசை – இளையராஜா
பாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
படம் வெளிவந்த வருடம் – 1986
நடித்தவர்கள் – சிவக்குமார், நதியா


கண்ணா….கண்ணா…. கண்ணா….
கண்ணா உனைத் தேடுகிறேன் வா

கண்ணீர்க் குயில் பாடுகிறேன் வா
உன்னோடு தான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
கண்ணீர் இன்னும் ஓயவில்லை
கன்னங்களும் காயவில்லை
கண்ணா உனைத் தேடுகிறேன் வா
கண்ணீர்க் குயில் பாடுகிறேன் வா

ஏன் இந்த காதல், என்னும் எண்ணம் தடை போடுமா

என் பாடல் கேட்ட பின்னும், இன்னும் பிடிவாதமா
என்ன நான் சொல்வது, இன்று வந்த சோதனை
மௌனமே கொல்வதால், தாங்கவில்லை வேதனை
உன்னைத் தேடி வந்தேன், உண்மை சொல்ல வேண்டும்
இந்த சோகம் கொள்ள என்ன காரணம்?

கண்ணா உனைத் தேடுகிறேன் வா
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா


கண்ணே உனைத் தேடுகிறேன் வா

காதல் குயில் பாடுகிறேன் வா
உன்னோடு தான் வாழ்க்கை

உள்ளே ஒரு வேட்கை

காதல் என்றும் தீர்வதில்லை

கண்ணே இனி சோகம் இல்லை

கண்ணே உனைத் தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா

சோகத்தின் பாஷை என்ன சொன்னால், அது தீருமா

கங்கை நீர் காயக்கூடும் கண்ணீர், அது காயுமா
சோதனை நேரலாம் பாசம் என்ன போகுமா
மேகங்கள் போய்விடும், வானம் என்ன போகுமா
ஈரமுள்ள கண்ணில் தூக்கம் இல்லை பெண்ணே
தோகை வந்த பின்னே சோகமில்லையே



கண்ணே உனைத் தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா

உன்னோடு தான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
காதல் என்றும் தீர்வதில்லை

கண்ணே இனி சோகம் இல்லை
கண்ணா உனைத் தேடுகிறேன் வா

காதல் குயில் பாடுகிறேன் வா


Tuesday 6 March 2012

கனாக் காணும் கண்கள் மெல்ல....


1982 ம் வருடத்தில் வெளிவந்த ”அக்னி சாட்சி” என்ற படத்தில் வந்த இந்த பாடல் மிகவும் இனிமையான பாடல். வாலி அவர்களின் வரிகளிலும், எஸ்.பி.பி அவர்களின் குரலிலும் இன்னும் இனிமை கூடுகிறது. எனக்கு பிடித்த இந்த பாடலை நீங்களும் கேட்டு ரசியுங்களேன்.

மீண்டும் ஒரு நல்ல பாடலுடன் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்.

படம் – அக்னி சாட்சி
இசை – எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல் வரிகள் – கவிஞர் வாலி
படம் வெளிவந்த வருடம் – 1982
நடித்தவர்கள் – சிவக்குமார், சரிதா




கனாக் காணும் கண்கள் மெல்ல 
உறங்காதோ பாடல் சொல்ல 
நிலாக்கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே 
உலாப் போகும் நேரம் கண்ணே  

கனாக் காணும் கண்கள் மெல்ல 
உறங்காதோ பாடல் சொல்ல 
நிலாக்கால மேகம் எல்லாம் 
உலாப் போகும் நேரம் கண்ணே 
உலாப் போகும் நேரம் கண்ணே 

குமரி உருவம் குழந்தை உள்ளம் 
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ 
தலைவன் மடியில் மகளின் வடிவில் 
தூங்கும் சேயோ

குமரி உருவம் குழந்தை உள்ளம் 
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ 
தலைவன் மடியில் மகளின் வடிவில் 
தூங்கும் சேயோ

நொடியில்  நாள்தோறும் நிறம் மாறும் தேவி 
விடை தான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி 
விளக்கு ஏற்றி வைத்தால் கூட 
நிழல் போலத் தோன்றும் நிஜமே
நிழல் போலத் தோன்றும் நிஜமே 


நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன்

உன் நிழலையோ பூஜிக்கிறேன்
அதனால் தான் உன் நிழல் விழுந்த
நிலத்தின் மண்ணைக் கூட
என் நெற்றியில் நீறு போல்  திருநீறு போல்
இட்டுக் கொள்கிறேன்

கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல 



புதிய கவிதை புனையும் குயிலே
நெஞ்சில் உண்டான காயம் என்ன
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும்
பாவம் என்ன
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
வருங்காலம் இன்பம் என்று
நிகழ்காலம் கூறும் கண்ணே
நிகழ்காலம் கூறும் கண்ணே

கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல 
நிலாக்கால மேகம் எல்லாம் 
உலாப் போகும் நேரம் கண்ணே