Tuesday 6 December 2011

ஓ பொன் மாங்குயில்………




எஸ்.பி.பியின் இனிமையான குரலில் ஒரு அருமையான பாடல். இதை கேட்கும் போதே ஒரு உற்சாகம் வரும். நீங்களும் இதை பார்த்து கேட்டு ரசியுங்களேன்....

அடுத்த பாடலுடன் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்.

படம்:                      மனசுக்குள் மத்தாப்பு
பாடகர்:                    எஸ்.பி.பி
நடிகர்கள்:                 பிரபு, சரண்யா
இசை:                     எஸ்.ஏ ராஜ்குமார்
படம் வெளிவந்த வருடம்: 1986



ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
பொன்மாங்குயில் சிங்காரமாய்
பண்பாடுதே சங்கீதக்காரன் எந்தன்
காதல் பாதையில்
உல்லாச பூங்குயில்கள் ராஜ பார்வையில்

ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
பொன்மாங்குயில் சிங்காரமாய்
பண்பாடுதே சங்கீதக்காரன் எந்தன்
காதல் பாதையில்
உல்லாச பூங்குயில்கள் ராஜ பார்வையில்

வானைத் தொட்ட மேகமெங்கே
பூவைத் தொட்ட தாகம் என்ன
தேனைத் தொட்ட வண்டு எங்கே
காற்றில் விட்ட சேதி என்ன
தங்கமலை சாரல் எந்தன் ஊரோ
இங்கு என்னைக் கைது செய்வார் யாரோ
அன்பாய் ஒரு தெய்வம் வந்து தாலாட்டுதே
நெஞ்சில் நூறு சந்தம் வந்து நீரூற்றுதே
கண்ணில் ஒரு மின்னல் கண்டேன்
என்னை இன்று கண்டு கொண்டேன்.

ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
பொன்மாங்குயில் சிங்காரமாய்
பண்பாடுதே சங்கீதக்காரன் எந்தன்
காதல் பாதையில்
உல்லாச பூங்குயில்கள் ராஜ பார்வையில்

நானிருந்த கூண்டுக்குள்ளே ராகம் சொல்ல யாருமில்ல
ஞாபகத்தை விட்டு விட்டேன் கீதம் எங்கே காணவில்ல
ஊமை என்னை பேச வைத்தார் யாரோ
உள்ளத்துக்குள் உள்ளம் வைத்தார் யாரோ
சொந்தம் என்று தென்றல் என்னை தாலாட்டுதே
துள்ளும் நதி என்னைத் தொட்டுப் பாராட்டுதே
பச்சை நிற பாய் விரித்து
கச்சேரி தான் சோலைக்குள்ளே

ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
பொன்மாங்குயில் சிங்காரமாய்
பண்பாடுதே சங்கீதக்காரன் எந்தன்
காதல் பாதையில்
உல்லாச பூங்குயில்கள் ராஜ பார்வையில்.....
ஓஓஓஓஓ……… ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
பொன்மாங்குயில் சிங்காரமாய்
பண்பாடுதே


 

4 comments:

  1. அட்டகாசமான பாடல்..நினைவுபடுத்தினதுக்கு நன்றிப்பா ஆதி..:)

    ReplyDelete
  2. எஸ்.பி.பியின் இனிமையான குரலில் ஒரு அருமையான பாடல். இதை கேட்கும் போதே ஒரு உற்சாகம் வரும்.

    nice..

    ReplyDelete
  3. நல்ல பாடல் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. எஸ்.பி.பியின் இனிமையான குரலில் ஒரு அருமையான பாடல். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete