Saturday 28 January 2012

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு




இளையராஜாவின் அற்புதமான இசையில் அழகான பாடல். தீபன் சக்கரவர்த்தி மற்றும் உமா ரமணனின் குரலில் இனிமையாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடல். நீங்களும் கேட்டு பார்த்து ரசியுங்களேன்….

வேறு நல்ல பாடலுடன் சந்திக்கும் வரை,


ஆதி வெங்கட்.
பின் குறிப்பு:  ரசித்த பாடல் வலைப்பூவினை தொடர்பவர்கள் எண்ணிக்கை தற்போது 50.  தொடர்பவர்கள் அனைவருக்கும் நன்றி.  

படம் – மெல்லப் பேசுங்கள்
பாடியவர்கள் – தீபன் சக்கரவர்த்தி, உமா ரமணன்
இசை – இளையராஜா
படம் வெளிவந்த வருடம் – 1983


கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு

வானவில்லில் அமைப்போம் தோரணம்
வண்டு வந்து இசைக்கும் நாயனம்
வானவில்லில் அமைப்போம் தோரணம்
வண்டு வந்து இசைக்கும் நாயனம்

தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து
தங்கத்தேரில் ஊர்கோலம் நாளை வந்து
தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து
தங்கத்தேரில் ஊர்கோலம் நாளை வந்து

காதல் மணம் காண்போம்
எண்ணம்போல் இன்பத்தின்
வண்ணங்கள்

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்

அந்தி வந்து மலரும் தாமரை
அங்கம் எங்கும் பொழியும் தேன்மழை
அந்தி வந்து மலரும் தாமரை
அங்கம் எங்கும் பொழியும் தேன்மழை
கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச்சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி
கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச்சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி
நாளை வரும் காலம் என்றென்றும் எங்களின் கைகளில்

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு

ஆரிராரோ ஆராரிராரிராரோ
ஆரிராரோ ஆராரிராரிராரோ
ஆரிராரோ ஆராரிராரிராரோ
ஆரிராரோ ஆராரிராரிராரோ

8 comments:

  1. செவ்வந்தி பூக்களில் செய்த வீடு

    அழ்கான பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. 50 பின் தொடர்பவர்கள் 500 ஆக வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. @ இராஜராஜேஸ்வரி: தங்களது உடனடி வருகைக்கும் வாழ்த்திற்கும், பாடலை ரசித்ததற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  4. நல்ல அழகான பாடல். மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  6. இனிமையான பாடல் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. @ லக்ஷ்மி: மிக்க நன்றிம்மா...

    ReplyDelete
  8. @ ரத்னவேல் நடராஜன்: மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete