Thursday 16 February 2012

கண்ணில் என்ன கார்காலம்........


உன் கண்ணில் நீர் வழிந்தால் படத்தில் வரும் இந்த பாடல் சோகமான பாடலாக இருந்தாலும் வைரமுத்து அவர்களின் உருக்கமான வரிகளாலும், இளையராஜாவின் இசையாலும் மெல்லிசையாக மனதைக் கவர்கிறது. எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. நீங்களும் கேட்டு ரசியுங்களேன்.

மீண்டும் ஒரு நல்ல பாடலுடன் சந்திக்கும் வரை,
ஆதி வெங்கட்.

படம் -  உன் கண்ணில் நீர் வழிந்தால்
பாடியவர்கள்- எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இசை - இளையராஜா
பாடல்வரிகள் - வைரமுத்து
நடித்தவர்கள் – ரஜினிகாந்த், மாதவி
படம் வெளிவந்த வருடம் - 1985



கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்
மனமே நினைவே மறந்து விடு
துணை நான் அழகே துயரம் விடு
விழியில் விழும் துளி என் மார்பில்
வீழ்ந்ததே கண்ணே
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா
நியாயமா பெண்ணே….

கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்

நானே உன் சுமையாக ஏன் வந்தேன்
சிறகெல்லாம் சிதையாக வாழ்கின்றேன்
நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும்
சுகமாக அழ வேண்டும்

கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்

இருள் மூடும் கடலோடு நானிங்கே
என் தோணி கரை சேரும் நாளெங்கே
பூவுக்குள் பூகம்பம்... எங்கு வரும் ஆனந்தம்
பூவுக்குள் பூகம்பம்... எங்கு வரும் ஆனந்தம்
நிழலாக நீ வந்தால்... இது போதும் பேரின்பம்

கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்
மனமே நினைவே மறந்து விடு
துணை நான் அழகே துயரம் விடு
விழியில் விழும் துளி என் மார்பில்
வீழ்ந்ததே கண்ணே
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா
நியாயமா பெண்ணே….

கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்

11 comments:

  1. அருமையான கருத்தான பாடல் பகிர்வு.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,

    தங்களது உடனடி வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  3. ரொம்ப பிடிச்சப்பாடல்.. .. ஹம்மிங் அடிக்கடி செய்வதும் கூட..

    ReplyDelete
  4. வாங்க முத்துலெட்சுமி,

    ஓ! உங்களுக்கும் பிடிச்ச பாட்டா?
    தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  5. அருமையான நல்லதொரு பாடல். மகிழ்ச்சி. ;)

    ReplyDelete
  6. அருமையான பாடல்
    கேட்டு ரசித்தேன்
    பகிர்ந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

    தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  8. வாங்க ரமணி சார்,

    தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  9. இந்தப் பாடலையும் என்னால் மறக்கமுடியாது வெங்கட் சார்.

    ReplyDelete
  10. வாங்க விச்சு,

    வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிங்க.

    ReplyDelete
  11. வாங்க ஹரணி சார்,

    தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete