Saturday 25 February 2012

புஞ்சையுண்டு நஞ்சையுண்டு……….




இளையராஜா அவர்களின் இனிமையான இசையிலும், புலமைப்பித்தன் அவர்களின் உற்சாகமூட்டும் பாடல் வரிகளாலும், எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் அபாரமான குரலாலும் இந்த பாடல் இனிமையானதாக அமைந்திருக்கிறது. நீங்களும் கேட்டு, பார்த்து ரசியுங்களேன்…..

மீண்டும் வேறு ஒரு நல்ல பாடலுடன் சந்திக்கும் வரை,


ஆதி வெங்கட்.

படம்  - உன்னால் முடியும் தம்பி
இசை  - இளையராஜா
பாடல்வரிகள்  - புலமைப்பித்தன்
பாடியவர் - S.P.பாலசுப்ரமணியம்
நடித்தவர்கள் – கமல்ஹாசன்
படம் வெளிவந்த வருடம் – 1988


புஞ்சையுண்டு நஞ்சையுண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை
எங்க பாரதத்தில் சோத்துச்சண்டை தீரவில்லை
வீதிக்கொரு கட்சி உண்டு 
சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கே நாதி இல்லை
சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லை
இது நாடா இல் வெறும் காடா?
இதைக் கேட்க யாரும் இல்லை தோழா!
இது நாடா இல்ல வெறும் காடா?
இதைக் கேட்க யாரும் இல்லை தோழா!

புஞ்சையுண்டு நஞ்சையுண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை
எங்க பாரதத்தில் சோத்துச்சண்டை தீரவில்லை

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது?
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ
வீடின்றி வாசலின்றித் தவிக்குது
எத்தனை காலம் இப்படிப் போகும்?
என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம் 
என்றிங்கு மாறும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும், ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு!
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு!

புஞ்சையுண்டு நஞ்சையுண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை
எங்க பாரதத்தில் சோத்துச்சண்டை தீரவில்லை

ஆத்துக்குப் பாதை இன்று யாரு தந்தது?
தானாகப் பாதை கண்டு நடக்குது
காற்றுக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது?
தானாகப் பாட்டு ஒன்னு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே!
காலையில் தோன்றும் சூரியன் போலே 
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே!
சேரியில் தென்றல் வீசாதா? ஏழையை வந்து தீண்டாதா?
கங்கையும் தெற்கே பாயாதா? காவிரியோடு சேராதா?
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா?

புஞ்சையுண்டு நஞ்சையுண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை
எங்க பாரதத்தில் சோத்துச்சண்டை தீரவில்லை
இது நாடா இல் வெறும் காடா?
இதைக் கேட்க யாரும் இல்லை தோழா!
இது நாடா இல்ல வெறும் காடா?
இதைக் கேட்க யாரும் இல்லை தோழா!

12 comments:

  1. சிந்திக்க வைக்கும் நல்ல அருமையான பாடல் வரிகள்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

    தங்களின் உடனடி வருகைக்கும், பாடல் ரசிப்பிற்கும் நன்றி.

    ReplyDelete
  3. இங்க வரும்போதே இன்று என்ன பாடல் என்று எதிர்பார்ப்புடனே வருவேன். ரசனையான பாடலுக்கு நன்றி

    ReplyDelete
  4. Nice song. I never forget this song in my life

    ReplyDelete
  5. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,

    தங்களின் வருகைக்கும், பாடல் ரசிப்பிற்கும் நன்றிங்க.

    ReplyDelete
  6. வாங்க கே.பி.ஜனா சார்,

    தங்களின் வருகைக்கும், பாடல் ரசிப்பிற்கும் நன்றி.

    ReplyDelete
  7. வாங்க லஷ்மிம்மா,

    தங்களின் வருகைக்கும், பாடல் ரசிப்பிற்கும் நன்றி.

    ReplyDelete
  8. வாங்க சந்துரு,

    தங்களின் வருகைக்கும், பாடல் ரசிப்பிற்கும் நன்றி.

    ReplyDelete
  9. எஸ்பிபியின் குரலில் மனம் ஈர்க்கும் வரிகளும் இசையும். பகிர்வுக்கு நன்றி ஆதி.

    ReplyDelete
  10. வணக்கம் நண்பரே தங்களின் பதிவை வலைச்சரத்தில் பதித்துள்ளேன்
    நன்றி
    http://blogintamil.blogspot.in/2012/03/blog-post_04.html

    ReplyDelete