Wednesday 31 October 2012

வனக்குயிலே குயில் தரும்……..



பிரியங்கா படத்தில் வரும் இந்த அழகான பாடல் எஸ்.பி.பி அவர்களின் குரலிலும், இளையராஜா அவர்களின் இசையாலும்  மேலும் மெருகேறுகிறது. நான் ரசித்த, அவ்வப்போது முணுமுணுக்கும் இந்தப் பாடலை நீங்களும் ரசியுங்களேன்.

மீண்டும் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்.

படம் - பிரியங்கா
பாடியவர்கள்
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை – இளையராஜா
நடித்தவர்கள் – ரேவதி, ஜெயராம்


 


வனக்குயிலே குயில் தரும் கவியே

கவி தரும் இசையே..யே..யே..யே
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
கொடி மலரே மலர் விடும் இதழே
இதழ் தரும் மதுவே..ஏ..ஏ
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே

ஹோயல்லோ ஹோய ஹோய ஹோயல்லோ
ஹோயல்லோ ஹோய ஹோய ஹோயல்லோ
ஹோய ஹோய ஹோய ஹோயே
 
ஹோய ஹோய ஹோய ஹோயே
 

உன் ஞாபகம் நெஞ்சில் வந்தாடுதே
ஓயாமலே என்னைப் பந்தாடுதே
உன் பூமுகம் கண்ணில் நின்றாடுதே
நான் கொஞ்சவே என்னை மன்றாடுதே
படித்தால் இனித்திடும் புதினம்
உனை நான் மறப்பது கடினம்
அலையாய் தொடர்ந்திடும் நினைப்பு
வலைக்குள் தவித்திடும் தவிப்பு
துளிர்க்கும் ஆசை துளிர்த்தால்
மேனி சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும்

வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே

ஆஹா ஒஹோ ஓஹோஹோ
ஓ ஓஹோஹோ ஓஹோஹோ
ஆஹா ஆஹா...

செவ்வாழைகள் பந்தலாய் தோன்றுதே
கூந்தல் பனை தோரணம் ஆனதே
பூமாலையாய் தோன்றும் பூஞ்சோலையே
எங்கெங்கும் கல்யாணக் கோலங்களே
மணநாள் நினைவுகள் மலரும்
மனதில் மலையென வளரும்
வருவேன் தருவேன் கிளியே
விழிக்குள் இருக்கும் விழியே
இணைந்தால் இருவர் இணைந்தால்
இன்ப வரவும் உறவும் சுகமே

வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே..
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
கொடி மலரே மலர் விடும் இதழே
இதழ் தரும் மதுவே..ஏ..ஏ..
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே

8 comments:

  1. நல்ல பாடல் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. நல்ல பாடல் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. எங்கள் பெருமைக்குரிய கலையரசியின் தவப்புதல்விக்கு,

    வணக்கம் பல. தங்களுக்கு பிடித்த பாடல்வரிகள் ஒவ்வொன்றும் ஓராயிரம் பொருள் பதிந்தது என்று சொன்னால் மிகையாகாது. இந்த பாட்டின் மகுடம் வைத்ததுபோல் உள்ள வரிகளாகிய "இணைந்தால், இருவர் இணைந்தால் , இன்ப வரவும், உறவும் சுகமே", . பாலுவின் குரல் இனிமையில் இன்னும் அதிகமாக சுடர்விட்டு ஒளிர்கின்றது.எனது "தாய் " மண்வாசனை ரேவதியின் நடிப்பு , வழக்கம் போல் முத்திரை பதிக்கின்றது.நல்லதொரு, மனத்தை வருடிடும் ஒரு சுகமான பாடலை வழங்கிய நீவீர் வாழ்க, வளர்க. நன்றி.

    தங்கள் ப்ளாக் விசுவாசி,

    V .K .N . velachery

    ReplyDelete
  4. இனிமையான பாடல் பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  5. பாடல் பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. அருமையான 1994 ல் உள்ள பாடல்

    ReplyDelete
  7. அருமையான பாடல். நினைவு படுத்தியதுக்கு நன்றி வெங்கட். அந்த வருடங்கள் எல்லாமே நல்ல பாடல்களைத் தந்திருக்கின்றன.

    ReplyDelete
  8. மனதை மயக்கும் எஸ் பி பியின் குரல். நல்லதொரு பாடல்.

    ReplyDelete