Monday 14 February 2011

வளையோசை கலகல கலவென…

1988-ஆம் வருடம் வெளியிடப்பட்ட சத்யா படத்திலிருந்து அடுத்த ரசித்த பாடல். சுரேஷ் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில் கமல்ஹாசன், அமலா நடித்த திரைப்படம். படத்திற்கு இசை None Other Than இளையராஜா. பாடலின் ஒலி வடிவமும், ஒளி வடிவமும் கீழே உங்களுக்காய்.

மீண்டும் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கிறேன்.

வெங்கட்.



Get Your Own Hindi Songs Player at Music Plugin


வளையோசை கலகல கலவென கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலுசிலுசிலு என சிறகுகள் பட படத்
துடிக்குது எங்கும் தேகம் கூசுது
சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளந்தான் அன்று காதல் தேரோட்டம்

வளையோசை கலகல கலவென கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலுசிலு சிலு என சிறகுகள் பட படத்
துடிக்குது எங்கும் தேகம் கூசுது

ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னைக் காணும் சபலம் வரக் கூடும்
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்
கண்ணே என் கண்பட்ட காயம்
கை வைக்க தானாக ஆரும்
முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்..

வளையோசை கலகல கலவென கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலுசிலு சிலு என சிறகுகள் பட படத்
துடிக்குது எங்கும் தேகம் கூசுது
சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளந்தான் அன்று காதல் தேரோட்டம்

வளையோசை கலகல கலவென கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது

உன்னைக் காணாதுருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்
நீங்காத ரீங்காரம் நான் தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே
ராகங்கள் தாளங்கள் நூறு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு
சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில் தான்

வளையோசை கலகல கலவென கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலுசிலு சிலு என சிறகுகள் பட படத்
துடிக்குது எங்கும் தேகம் கூசுது
சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளந்தான் அன்று காதல் தேரோட்டம்

வளையோசை கலகல கலவென கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலுசிலு சிலு என சிறகுகள் பட படத்
துடிக்குது எங்கும் தேகம் கூசுது




13 comments:

  1. மிக நல்லதொரு பாடல். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. அருமையான பாடல் நன்றிகள்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. பாடும் நிலாவின் அருமையான குரலில் என்றும் புத்துணர்வு தரும் பாடல்

    ReplyDelete
  5. I have changed Indli from 10 to 11. Enjoyed the song. Very Nice. Thank you. vgk

    ReplyDelete
  6. எனக்கு மிகப்பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  7. அருமையான பாட்டு சூப்பர்

    ReplyDelete
  8. கருத்துரையிட்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி. இண்ட்லியில் வாக்களித்து பிரபலமாக்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி!!!!

    ReplyDelete
  9. அருமையான பாட்டு.

    ReplyDelete
  10. அருமையா பாடல் வாழ்த்துக்கள்..
    தொடர்ந்து பகிருங்கள்..

    ReplyDelete
  11. எனக்குப் பிடித்த பாடலைப் பதிவிட்டதற்கு நன்றிகள் வெ,நா

    ReplyDelete
  12. ஆஹாஹா! என்ன பாட்டு! என்ன பாட்டு! படித்து(?) ரசித்தேன்.

    “நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
    நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்” இந்த ஒரு வரியிலேயே, வாலி நம்மை காலி பண்ணி விடுகிறார்.

    ReplyDelete