Saturday 16 April 2011

நினைவாலே சிலை செய்து உனக்காக



சிவாஜி கணேசன், சுஜாதா நடித்த அந்தமான் காதலி படம். படம் வெளிவந்து 33 வருடங்கள் கழிந்தாலும் இன்னமும் பசுமையாய் நினைவில் நிற்கும் பாடல். கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் தேனினும் சுவையாக இனிக்கும். பாடலின் விவரங்கள் கீழே.

படம்: அந்தமான் காதலி
பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம்.
நடிகர்கள்: சிவாஜி கணேசன், சுஜாதா
பாடல் வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
படம் வெளிவந்த வருடம்: 1978

பாடலைக் கேட்க:


Ninaivaale Silai Seithu | Online Karaoke

பாடலைக் காண:



பாடல் வரிகள்:

நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடிவா..ஆ.. திருக்கோவிலே ஓடி வா

நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடிவா..ஆ.. திருக்கோவிலே ஓடி வா
நீர் இன்றி யார் இல்லை நீ இன்றி நான் இல்லை
நீர் இன்றி யார் இல்லை நீ இன்றி நான் இல்லை
வேரின்றே மலரே ஏதம்மா…ஆ… வேரின்றே மலரே ஏதம்மா…
நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடிவா

அய்யாவின் நினைவேதான் நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும் தப்பாத தாளங்கள்
அய்யாவின் நினைவேதான் நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும் தப்பாத தாளங்கள்
கண்ணீரிலே நான் தீட்டினேன் கன்னத்தில் கோலங்கள்….ள்.ள்….
கன்னத்தில் கோலங்கள்
செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
சம்சாரத்தேரில் நான் ஏறி வந்தேன்…
திருக்கோவிலே ஓடிவா ..ஆ.. திருக்கோவிலே ஓடி வா
நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடிவா

முல்லைக்குக் குழல் தந்த பெண்மைக்குப் பெண்மை நீ
பிள்ளைக்குத் தோள் தந்த அன்னைக்கு அன்னை நீ
முல்லைக்குக் குழல் தந்த பெண்மைக்குப் பெண்மை நீ
பிள்ளைக்குத் தோள் தந்த அன்னைக்கு அன்னை நீ
அதிகாலையில் நான் கேட்பது நீ பாடும் பூபாளம்
என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி
என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி
செவ்வானமானேன் உனைத் தேடித்தேடி
திருக்கோவிலே ஓடிவா ..ஆ.. திருக்கோவிலே ஓடி வா
நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடிவா ஆ.. திருக்கோவிலே ஓடி வா….

10 comments:

  1. அருமையான பாடல், கவியரசு இயற்றி, நடிகர் திலகம் நடித்தது, இன்றும் என் பசுமையான நினைவுகளில்.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. மிக அருமையான பாடல்.

    ஒரே குறை, திருக்கோயிலே ஓடிவா என்பதை தெருக்கோயிலே ஓடிவா என்று பாடியிருப்பார் ஜேசுதாஸ்.

    ReplyDelete
  3. //திருக்கோயிலே ஓடிவா என்பதை தெருக்கோயிலே ஓடிவா என்று பாடியிருப்பார் ஜேசுதாஸ்.//

    கலாநேசன், தன் தவறை தானே பிற்காலத்தில் சொன்னார் அவர். அவர் தமிழுக்கு வந்தப் புதிது அது. :)

    ReplyDelete
  4. கே.ஜே குரலில் கானமிர்தம். இப்போது பாடும் பழி சொல்லக்கூடாது என்பதற்கு தெருக்கொவிலை சகித்துக் கொள்ளலாம். ;-)

    ReplyDelete
  5. //திருக்கோயிலே ஓடிவா என்பதை தெருக்கோயிலே ஓடிவா என்று பாடியிருப்பார் ஜேசுதாஸ்.//

    கலாநேசன், தன் தவறை தானே பிற்காலத்தில் சொன்னார் அவர். அவர் தமிழுக்கு வந்தப் புதிது அது. :)//

    பாடகரை குறை சொல்வதில் அர்த்தமில்லை...
    இசையமைப்பாளர், இயக்குனர் தான் இதை
    சரிசெய்திருக்கவேண்டும் !
    (உடிட் நாராயண்'க்கு இவர் தேவலாம்)

    ReplyDelete
  6. ஓ தெருக்கோயிலே விசயம் தான் இந்தப்பாட்டைக் கேக்கும்பொதெல்லாம் தோன்றும்.. ஆகாயமனிதன் சொன்னது போல யாராவது திருத்தி இருக்கலாம் அந்நேரமே..

    ReplyDelete
  7. கருத்தளித்து இண்ட்லியில் வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  8. நான் ரசித்த பாடல்களுள் ஈஊஊ ஓன்று.அருமை.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. அருமையான பாடல்,

    ReplyDelete
  10. Jesudas told in an interview long time ago, that instead of telling the correction to the press, Kannadasan could have corrected me in the recording theatre. But to be frank, whenever I hear this song, both Therukoil and Kannadasan will come to my mind. I do not know why ? :)

    ReplyDelete